Sbs Tamil - Sbs

‘ஆதரவற்றவர்களை அவர்கள் மதத்தின்படி அடக்கம் செய்வதே உயர்ந்த மனித நேயம்’

Informações:

Sinopsis

அமீர் அம்சா அவர்கள் உயர்ந்த மனித நேயத்தின் அடையாளம். மதங்களின் பெயரால் மனிதகுலம் பிளவுபடும் போக்கு அதிகரித்திருக்கும் நிலையில், தமிழநாட்டில் ஆதரவற்ற நிலையில் மரணிக்கும் மனிதர்களை கடந்த 28 ஆண்டுகளாக அவர்களின் மத வழக்கப்படி நல்லடக்கம் செய்துவருகின்றனர் அமீர் அம்சாவும் அவரின் நண்பர்களும். இந்த சேவையை பாராட்டி தமிழக அரசு மற்றும் “விகடன்” விருதுகள் வழங்கி பாராட்டியுள்ளன. ரமலான் பெருவிழா வேளையில் அமீர் அம்சா அவர்களை சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.